பிரபல தகவல் தொடர் செயலியான வாட்ஸ் ஆப் அட்மின்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் குறுச்செய்தி செயலியான வாட்டஸ் ஆப், பாதுகாப்புக் காரணங்கள் மற்றும் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பல பில்லியன் கணக்கான யூசர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப்-ஐ ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்து வருகிறது.
இதுவரை ஒரு நபரை குழுவில் இணைக்கவோ அல்லது நீக்கவோ மட்டுமே அட்மின்களுக்கு அதிகாரம் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக அவர்கள் பதிவிடும் விரும்பத்தகாத செய்திகளையும் நீக்க அதிகாரம் வழங்கப்பட உள்ளது. அதேபோல் டெலிட் பார் எவரிஒன் அம்சத்திற்கான நேரத்தை நீடிக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.